தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை கொடூரமாக கடித்த குரங்கு
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஆறு மாத குழந்தையை குரங்கு கடித்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள தீதான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது ஆறு மாத குழந்தை அனன்யாவை குழந்தையின் தாய் வீட்டின் போர்டிகோவில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் படுக்க வைத்து விட்டு சென்ற நிலையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த குரங்கு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஆறு மாத குழந்தை அனன் யாவை கடித்துள்ளது. பின்னர் அப்பகுதியினர் சத்தம் போட்டதால் குழந்தையை அங்கேயே விட்டுச் சென்ற நிலையில் குரங்கு கடித்ததில் குழந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்டு தற்பொழுது சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு கறம்பக்குடி அருகே உள்ள சுக்கிரன் னவிடுதியில் வீட்டில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த மூன்று மாத ஆண் குழந்தை அதியனையும் குரங்கு கடித்ததில் இடது தொடையில் காயம் ஏற்பட்டு அந்த குழந்தையும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய தொடர்ந்து அப்பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து வரக்கூடிய நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரட்டி விரட்டி குரங்குகள் கடித்து வருவதாகவும் அதனால் குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


