மோடி இலங்கை பயணம்- தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை
Apr 4, 2025, 16:56 IST1743765968737

பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தை தொடர்ந்து, தமிழக மீனவர்கள் 11 பேர் முதற்கட்டமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யப்பட்டனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 27 ஆம் தேதி மீன் பிடிக்க சென்ற மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி இன்று மாலை இலங்கை செல்லும் நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.