தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழை
Updated: Nov 1, 2023, 08:11 IST1698806476011

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் , நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. .
இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு விழுப்புரம் , கடலூர் ,அரியலூர் , பெரம்பலூர் , மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.