இலங்கையால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்! ஸ்டாலின் கடிதம்

 
stalin

கடந்த ஜன.13ம் தேதி இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம்  மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

stalin

அந்த கடிதத்தில், இலங்கை கடற்படையினரால்‌ தமிழ்நாடு மீனவர்களும்‌ அவர்களது மீன்பிடிப்‌ படகுகளும்‌ தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது குறித்து தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்‌.   நாகப்பட்டினம்‌ மீன்பிடித்‌ துறைமுகத்திலிருந்து 13.01.2024 இன்று கடலுக்கு மீன்பிடிக்கச்‌ சென்ற 10 மீனவர்களையும்‌, அவர்களின்‌ விசைப்படகையும்‌ இலங்கைக்‌ கடற்படையினர்‌ 15.01.2024 அன்று சிறைபிடித்தனர்‌ என்றும்‌, மற்றொரு சம்பவத்தில்‌, ராமநாதபுரம்‌, பாம்பன்‌ பகுதியைச்‌ சேர்ந்த 18 மீனவர்களையும்‌ அவர்களது இரண்டு விசைப்படகுகளையும்‌ 16.01.2024 அன்று இலங்கை கடற்படையினர்‌ சிறைபிடித்துள்ளனர்‌ என்றும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தனது கடிதத்தில்‌ கவலைபடத்‌ தெரிவித்துள்ளார்‌. 

கடந்த மூன்று நாட்களில்‌ இலங்கை கடற்படையினர்‌ தமிழ்நாடு மினவர்களை அடுத்தடுத்து சிறைபிடித்துள்ளனர்‌ என்று தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இத்தகைய கைது நடவடிக்கைகள்‌ மீன்பிடி தொழிலை மட்டுமே தங்கள்‌ வாழ்வாதாரமாக நம்பியுள்ள மீனவ சமூதாயத்தினரிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது என்று தனது கடிதத்தில்‌ தெரிவித்துள்ளார்‌.  இலங்கை கடற்படையினரின்‌ சிறைபிடிப்பு நடவடிக்கைகளில்‌ எந்த தளர்வும்‌ இருப்பதாகத்‌ தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இத்தகைய தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை தடுத்திட இலங்கை அரசுக்கு வலியுறுத்திட வேண்டுமென்றும்‌ இலங்கை கட்டுப்பாட்டில்‌ உள்ள அனைத்து படகுகளையும்‌ விடுவிக்க தெளிவான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டுமென்றும்‌ தனது கடிதத்தில்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.  

M.K.Stalin

இலங்கை கடற்படையினரால்‌ கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும்‌ அவர்களது மீன்பிடிப்‌ படகுகளையும்‌ உடனடியாக விடுவிக்க இலங்கை அரசுடன்‌ இந்த விவகாரத்தை வலுவாக எடுத்துச்‌ செல்ல வேண்டும்‌ என்றும்‌ மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்‌ துறை அமைச்சர்‌ அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.