சமூக வலைத்தளம் முழுக்க ரயில் பரிதாபங்கள் வீடியோக்களை பார்த்தோம்- மு.க.ஸ்டாலின்
நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 2-ஆக குறைத்துள்ளது இந்திய ரயில்வே. 26 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு பதிலாக, AC 3 Tier பெட்டிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாகச் செல்லும் ரயில்களின் முன்பதிவில்லாப் பெட்டிகள் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளம் முழுக்க இரயில் #பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்!
— M.K.Stalin (@mkstalin) February 21, 2025
அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு! https://t.co/PSuu6MEEqV
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சமூக வலைத்தளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்! அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு!” எனக் குறிப்பிட்டுள்ளார்.