"கரூர் விவகாரத்தில் எந்த ஒரு தனிநபர் மீதும் பழி சுமத்தி பலிகடா ஆக்குவது நோக்கம் இல்லை”- மு.க.ஸ்டாலின்

 
ச் ச்

கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழி சுமத்தி பலிகடா ஆக்குவது  நமது நோக்கம் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

A framed portrait of a revered figure in traditional attire seated with hands in gesture inside an ornate hall, and a man in white shirt and glasses speaking into a microphone from a podium in the foreground. Below, a large green-carpeted assembly hall filled with rows of seated individuals in formal attire, some wearing yellow shirts, under bright lighting with wooden architecture and multiple microphones visible.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது.

இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'களை (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்பமை உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.