முனைவர் பட்டம் பெற்ற பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்டர்டாமில் உள்ள பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கத்தில், முனைவர் @RKRadhakrishn-க்கு வாழ்த்துகள். ஆண்டுகள் எத்தனையானாலும் அறிவுதேடலுக்கு எல்லை இல்லை எனப் பயணிக்கும் நீங்கள் தமிழ்நாட்டுக்குத் திரும்பியவுடன் சந்திப்போம்! என்று பதிவிட்டுள்ளார்.
முனைவர் @RKRadhakrishn-க்கு வாழ்த்துகள் 💐💐💐!
— M.K.Stalin (@mkstalin) November 8, 2023
ஆண்டுகள் எத்தனையானாலும் அறிவுதேடலுக்கு எல்லை இல்லை எனப் பயணிக்கும் நீங்கள் தமிழ்நாட்டுக்குத் திரும்பியவுடன் சந்திப்போம்! https://t.co/9TVqIXPv8m
இதற்கு நன்றி தெரிவித்துள்ள முனைவர் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன், உங்கள் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா. தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு (Srilankan Refugees) தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை எனது உரையில் குறிப்பிடுவதில் பெருமிதம் கொண்டேன். என்று குறிப்பிட்டுள்ளார்.