"தொகுதி மறுவரையறை விவகாரத்தில் நமது உரிமையை விட்டுக்கொடுக்கக் கூடாது"- மு.க.ஸ்டாலின்

 
தொகுதி மறுவரையறை, நிதிப்பகிர்வு, மும்மொழிக் கொள்கை ஆகியவற்றில் தேசிய அளவிலான கவனத்தை ஈர்க்க அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு செயலாற்றிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்பிக்கள் கூட்டத்தில் அறிவுரை வழங்கியுள்ளார்.  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நாளை (மார்ச் 10) தொடங்கி, ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து ஆலோசிக்கும் வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “  நாம் நடத்திய ஒரே ஒரு அனைத்துக்கட்சிக் கூட்டம்  இந்தியா முழுக்க நம்மை நோக்கி கவனத்தை திருப்பி இருக்கிறது. தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படவுள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 29 கட்சிகளுக்கும், முதலமைச்சர்களுக்கும் நான் கடிதம் அனுப்பி இருக்கிறேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா நம் சார்பில் ஒரு அமைச்சர், ஒரு எம்.பி. அடங்கிய குழு சென்று இந்த கருத்தை விளக்க வேண்டும்.    தொகுதி மறுவரையறை பிரச்சினையில் நமக்கான உரிமைய பெற இது ஒரு தொடக்கம்தான். நம் கோரிக்கைகள் முழுமையா வெற்றியடையும் வரை இந்த போராட்டமும் முன்னெடுப்பும் தொடர வேண்டும். தொகுதி மறுவரையறை, நிதிப்பகிர்வு, மும்மொழிக் கொள்கை வழியா இந்தி மொழித் திணிப்புனு தொடர்ச்சியா நம்மள பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது. இவற்றில் தேசிய அளவிலான கவனத்தை ஈர்க்க அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு செயலாற்றிட வேண்டும். தொகுதி மறுவரையறை என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் பிரச்சனை இல்லை. தமிழ்நாட்டின் பிரச்சனை. பல மாநிலங்களின் பிரச்சனை. எனவே திமுக எம்பிக்கள் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்பிக்களையும் ஒருங்கிணைத்து முன்னெடுப்புகளை டெல்லியில் மேற்கொள்ள வேண்டும். உடனடியாக டெல்லியில் தமிழ்நாட்டுஎம்பிக்களின் கூட்டத்தை நடத்தி அவர்களது கருத்துகளையும் கேட்டு செயலாற்றிட வேண்டும்.    மும்மொழிக் கொள்கை பிரச்சினையில், நம் வாதங்களை மிக எச்சரிக்கையோட வைக்கணும். இந்தித் திணிப்பைத்தான் நாம எதிர்க்குறோமே தவிர இந்தி மொழியையோ, அந்த  மக்களையோ இல்லை. அதனால், இந்தி உட்பட எந்த  மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம். “எங்கள் மாநிலத்தில் இருமொழிக் கொள்கை மூலமா அடைந்திருக்கும் வளர்ச்சியைப் பாருங்கள் - உலகம் முழுக்க தமிழ்நாட்டு இளைஞர்கள் சென்று பெரிய பொறுப்புகளில் இருப்பதை கவனியுங்கள் ”- என அவர்களும் நம் தரப்பு நியாயத்த புரிஞ்சிக்குற மாதிரி பேசுங்க. “இந்தி படிக்கலன்னா நிதி தர மாட்டோம்னு சொல்றது சர்வாதிகாரம் இல்லையா?” என்பதுதான் நம் கேள்வியாக இருக்க வேண்டும். நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும் போது அனைத்து திமுக எம்பிக்களும் தவறாமல் அவையில் இருக்க வேண்டும். மாநிலத்தின் உரிமைகளுக்காகவும், மக்களின் நலனுக்காவும் தி.மு.க. எம்பிக்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை மக்களிடம் உருவாக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்” என்றார்.

தொகுதி மறுவரையறை, நிதிப்பகிர்வு, மும்மொழிக் கொள்கை ஆகியவற்றில் தேசிய அளவிலான கவனத்தை ஈர்க்க அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு செயலாற்றிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்பிக்கள் கூட்டத்தில் அறிவுரை வழங்கியுள்ளார்.

mkstalin

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நாளை (மார்ச் 10) தொடங்கி, ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து ஆலோசிக்கும் வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “  நாம் நடத்திய ஒரே ஒரு அனைத்துக்கட்சிக் கூட்டம்  இந்தியா முழுக்க நம்மை நோக்கி கவனத்தை திருப்பி இருக்கிறது. தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படவுள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 29 கட்சிகளுக்கும், முதலமைச்சர்களுக்கும் நான் கடிதம் அனுப்பி இருக்கிறேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா நம் சார்பில் ஒரு அமைச்சர், ஒரு எம்.பி. அடங்கிய குழு சென்று இந்த கருத்தை விளக்க வேண்டும்.  

தொகுதி மறுவரையறை பிரச்சினையில் நமக்கான உரிமைய பெற இது ஒரு தொடக்கம்தான். நம் கோரிக்கைகள் முழுமையா வெற்றியடையும் வரை இந்த போராட்டமும் முன்னெடுப்பும் தொடர வேண்டும். தொகுதி மறுவரையறை, நிதிப்பகிர்வு, மும்மொழிக் கொள்கை வழியா இந்தி மொழித் திணிப்புனு தொடர்ச்சியா நம்மள பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது. இவற்றில் தேசிய அளவிலான கவனத்தை ஈர்க்க அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு செயலாற்றிட வேண்டும். தொகுதி மறுவரையறை என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் பிரச்சனை இல்லை. தமிழ்நாட்டின் பிரச்சனை. பல மாநிலங்களின் பிரச்சனை. எனவே திமுக எம்பிக்கள் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்பிக்களையும் ஒருங்கிணைத்து முன்னெடுப்புகளை டெல்லியில் மேற்கொள்ள வேண்டும். உடனடியாக டெல்லியில் தமிழ்நாட்டுஎம்பிக்களின் கூட்டத்தை நடத்தி அவர்களது கருத்துகளையும் கேட்டு செயலாற்றிட வேண்டும். 

M.K.Stalin


மும்மொழிக் கொள்கை பிரச்சினையில், நம் வாதங்களை மிக எச்சரிக்கையோட வைக்கணும். இந்தித் திணிப்பைத்தான் நாம எதிர்க்குறோமே தவிர இந்தி மொழியையோ, அந்த  மக்களையோ இல்லை. அதனால், இந்தி உட்பட எந்த  மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம். “எங்கள் மாநிலத்தில் இருமொழிக் கொள்கை மூலமா அடைந்திருக்கும் வளர்ச்சியைப் பாருங்கள் - உலகம் முழுக்க தமிழ்நாட்டு இளைஞர்கள் சென்று பெரிய பொறுப்புகளில் இருப்பதை கவனியுங்கள் ”- என அவர்களும் நம் தரப்பு நியாயத்த புரிஞ்சிக்குற மாதிரி பேசுங்க. “இந்தி படிக்கலன்னா நிதி தர மாட்டோம்னு சொல்றது சர்வாதிகாரம் இல்லையா?” என்பதுதான் நம் கேள்வியாக இருக்க வேண்டும். நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும் போது அனைத்து திமுக எம்பிக்களும் தவறாமல் அவையில் இருக்க வேண்டும். மாநிலத்தின் உரிமைகளுக்காகவும், மக்களின் நலனுக்காவும் தி.மு.க. எம்பிக்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை மக்களிடம் உருவாக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்” என்றார்.