தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் : கலைஞர் பிறந்தநாளில் சபதமேற்கத் தொண்டர்களுக்கு அழைப்பு.!

 
MK Stalin

கருணாநிதி பிறந்த நாளையொட்டி திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 


அவரது பதிவில் ; 

நேர்லயும் சோஷியல் மீடியாக்கள்லயும் உடன்பிறப்புகளான நீங்க வெளிப்படுத்துற உணர்வுகளைக் கவனிக்குறேன். தேர்தல் முடிவுகளைக் கடந்து, தலைவர் கலைஞர் ஊட்டிய உணர்வோட பயணிக்குற நமக்கு, புத்தெழுச்சி ஊட்டக் கூடிய நாளா, தலைவர் கலைஞரின் பிறந்தநாள் வருது!

ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கி, தலைவர் கலைஞரின் பிறந்தநாளைக் கொண்டாடுற அதேவேளையில், சோஷியல் மீடியாவுலயும் தலைவர் கலைஞரின் வரலாற்றுச் சாதனைகளைப் பரப்புவோம்! இளைய தலைமுறைக்கு நம்மோட வரலாற்றையும் – தேவையையும் எடுத்துச் சொல்வோம்!

தமிழ்நாட்டின் எதிர்காலம் சிறக்கணும்னா அதுக்கு தி.மு.க.தான் தேவை என்பதை இளைஞர்களுக்குச் சொல்ல தலைவர் கலைஞரின் பிறந்தநாளில் உறுதியேற்று உழைக்கத் தொடங்குவோம்!


அற்ற குளத்து அறுநீர்ப் பறவை போல இல்லாமல், கொட்டியும் ஆம்பலும் போல எப்போதும் உடனிருப்பவர்கள் தான் திமுக உடன்பிறப்புகள்.

கருணாநிதியின் உடன்பிறப்புகளான நமக்கு ஊக்கமும், உற்சாகமும் தருவதற்காகவே வரவிருக்கிறது, ஜூன், கருணாநிதியின் பிறந்த நாள்.

அந்த நாளில் கட்சிக் கிளைகள் எங்கும் கருப்பு, சிவப்புக்கொடி உயர்ந்து பறக்கட்டும். ஏழைகளுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கும் உதவிகள் வழங்குங்கள்.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூகவலைதளங்களில், நவீன தமிழகத்தின் சிற்பு கருணாநிதியின் வரலாற்று சாதனைகளைப் பரப்புங்கள்.

திமுகவினரான நம் பயணம் ஒருநாளும் ஓயாது, என்றென்றும் தொடரும் என ஜூன் 3ம் தேதியன்று கருணாநிதி மீது ஆணையிட்டு உறுதியேற்போம், எனக் குறிப்பிட்டுள்ளார்.