அதிமுக - பாஜக கூட்டணி அமைத்ததுமே மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வந்துவிட்டது - நயினார் நாகேந்திரன்..!!
எப்போது அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்ததோ அப்போதிருந்தே முதலமைச்சருக்கு ஜுரம் வந்துவிட்டது என்றும், தோல்வி பயம் வந்துவிட்டது என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரனிடம், பாஸ்டாக்கிற்கு தமிழக போக்குவரத்து கழகம் பாக்கி வைத்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ டீசல், பெட்ரோல் போடுவதிலேயே கோடிக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளார்கள். அரசாங்கம் போக்குவரத்து மானியம் கொடுத்து அதை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதலமைச்சரின் செய்ய வேண்டிய வேலை. அதனால் போக்குவரத்து கழகம் பாதிக்கப்படுகிறது.” என்றார்.
திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை குறித்த கேள்விக்கு , “தமிழ்நாடு இங்கே தான் இருக்கிறது. அதில் எதற்கு ஓரணியில் பயணம் செய்ய வேண்டும் என தெரியவில்லை. முதலமைச்சரை பொருத்தமட்டில் எப்போது அதிமுக கூட்டணி அமைந்ததோ, அப்போதிருந்தே அவருக்கு ஜுரம் வந்துவிட்டது. தோல்வி பயம் வந்துவிட்டது. கூட்டணி கட்சித் தலைவர்களும் அதே மாதிரி தான் பேசுவார்கள். அம்பாசமுத்திரத்தில் ஒரு 17 வயது சிறுமியை போதை பழக்கமுடையவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். வள்ளியூரில் ஒரு மூதாட்டி 17 பவுன் நகை கடற்கொலை செய்யப்பட்டிருக்கிறார். தினசரி இது போன்ற சட்ட ஒழுங்கு பிரச்சனை, போதைப் பொருள்கள் நடமாட்டம் உள்ளது. இதை மறைப்பதற்காக முதல்வர் ஓரணியில் தமிழ்நாடு என்கிற பெயரில் ஊர் ஊராக செல்கிறார். இதனால் எந்த நன்மையும் இல்லை. திமுக இன்று வெகுஜனம் விரோத ஆட்சியாக . நிச்சயமாக 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

முதலமைச்சருக்கு இப்போது என்ன பேசுவது என்று தெரியவில்லை. முன்னாள் முதல்வர் பழனிச்சாமி அவர்கள் பேச வேண்டிய கருத்தைதான் பேசியிருக்கிறார். கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம், டம்மி வாய்ஸாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அண்ணன் வைகோ அவர்கள் எப்போதும் அதிகம் கோபப்படக் கூடியவர். கூட்டத்தில் இருக்கும்போது சத்தம் போடுவது எல்லா இடங்களிலும் செய்கிறார். பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டு இருக்கிறார். உண்மையில் அது கண்டிக்கத்தக்கது, வருந்தத்தக்கது.
மாநாடு நடைபெறுவதற்கு முன்னால் ஆறு நாட்கள் 2.5 லட்சம் பேர் வந்திருந்தார்கள். ஆறாம் நாள் 5 லட்சம் பேர் வந்தனர். திமுக கட்சிக் கூட்டம் நடத்தினால் டாஸ்மாக்கில் தான் அதிக கூட்டம் இருக்கும். ஆனால் இந்த கூட்டத்திற்கு வந்தவர்கள் கூட்டம் முடிந்தவுடன் அமைதியாக அமர்ந்திருந்த சேரை எடுத்து அடுக்கி வைத்துவிட்டு கீழே கிடந்த பாட்டிலை சுத்தம் செய்துவிட்டு சென்றார்கள். இதுதான் உண்மையான முருக பக்தர்கள் மாநாடு. திருச்செந்தூரில் நடைபெற்ற கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய கும்பாபிஷேகம். தனிமனிதனாக சேகர்பாபு சொல்கிறார் என்றால் பொறுப்பேற்க முடியாது” என்று தெரிவித்தார்.


