கலைஞர் நூற்றாண்டு விழா...திமுக மகளிரணி சார்பில் வினாடி வினா போட்டி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மகளிரணி சார்பில் வினாடி வினா போட்டி நடத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் கழக மகளிரணி சார்பில் தங்கை கனிமொழி முன்னெடுக்கும் #கலைஞர்100-இல் வினாடி - வினாப் போட்டி முயற்சி பாராட்டத்தக்கது. செப்டம்பர் 15-ஆம் நாள் தொடங்கவுள்ள உள்ள வினாடி வினாப் போட்டிக்கு இப்போதில் இருந்தே தயாராகுங்கள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் கழக மகளிரணி சார்பில் தங்கை @KanimozhiDMK முன்னெடுக்கும் #கலைஞர்100-இல் வினாடி - வினாப் போட்டி முயற்சி பாராட்டத்தக்கது.
— M.K.Stalin (@mkstalin) September 3, 2023
செப்டம்பர் 15-ஆம் நாள் தொடங்கவுள்ள உள்ள #Kalaignar100quiz வினாடி வினாப் போட்டிக்கு இப்போதில்… pic.twitter.com/URd2JKiiWu
இதேபோல் திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அறிவியக்கமாக வாழ்ந்து வழிகாட்டிய தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில், திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும் வரலாற்றுச் சிறப்புகளையும் முற்றிலும் புதிய பரிமாணத்தில் எடுத்துச் செல்லும் முயற்சி ‘கலைஞர் 100 - வினாடி வினா’போட்டி! செப்டம்பர் 15 அன்று துவங்கவுள்ள நிகழ்வுக்கு, இன்று முதல் உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். இந்நிகழ்வைத் துவங்கி வைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.