மழையால் ஏற்பட்ட பயிர்சேதங்கள் - முதலமைச்சரிடம் நாளை அறிக்கை சமர்ப்பிப்பு

 
stalin

வடகிழக்கு பருவமழையினால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்கள் உள்ளிட்ட விவரங்களை அமைச்சர்கள் குழு நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறது. 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. பல்வேறு இடங்களில் நீர்நிலைகள் நிரம்பி விளைநிலங்களுக்குள் புகுந்துள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இவ்வாறு மழையால் ஏற்பட்ட சேத விவரங்களை ஆய்வு செய்த கணக்கிட அமைச்சர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தது. 

பயிர்கள் சேதம்

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையினால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்கள் உள்ளிட்ட விவரங்களை அமைச்சர்கள் குழு நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறது. இது தொடர்பாக ஏற்கெனவே, வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு அவர்கள் முதல்நிலை ஆய்வினை மேற்கொண்ட நிலையில், கடந்த இரு தினங்களாக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் அடிப்படையில், சேகரிக்கப்பட்ட விவரங்கள் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது.