வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த பொறுப்பு அமைச்சர்கள்.. கோவைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி நியமனம்.!

 
மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்..


கோவை மாவட்டத்திற்கு மீண்டும் பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.  அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு நடைபெற்ற முதல் ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி ,  கே.என்.நேரு, பொன்முடி, புதிதாக அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள செந்தில் பாலாஜி, ஆவடி நாசர்,  கோவி. செழியன், ராஜேந்திரன் உள்பட  அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.  

தமிழ்நாட்டில் வளர்ச்சித் திட்டங்களை விரைவில் செயல்படுத்துவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.  மேலும், வளர்ச்சித் திட்டங்கள் முழுமையாம மக்களை சென்றடைய, சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, கோவை மாவட்டத்திற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி நியமனம். 

 ‘வாழ்நாள் முழுவதும் உங்கள் கைகளை இறுகப்பற்றிக் கொள்கிறேன்’ - அமைச்சர் செந்தில் பாலாஜி உருக்கம்..  

திருநெல்வேலி மாவட்டத்திற்கு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நியமனம்.

தேனி மாவட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி நியமனம்.

திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நியமனம்.  

தருமபுரி மாவட்டத்திற்கு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நியமனம்.  

தென்காசி மாவட்டத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நியமனம். 

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நியமனம் 

நாட்டுடைமையாக்கப்பட்ட ஏழு தமிழ் அறிஞர்களின் நூல் : தமிழக அரசு அரசாணை

நீலகிரி மாவட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நியமனம்.  

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி நியமனம்.  

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி நியமனம். 

பெரம்பலூர் மாவட்டத்திற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நியமனம்.  

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நியமனம்.  

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.