"விளையாட்டில் சாதிக்க வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது"- உதயநிதி ஸ்டாலின்
ஆசிய மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 1,021 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை காசோலைகளை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “விளையாட்டு எவ்வளவு சக்தி வாய்ந்தது, மரியாதைக்குரியது என்பதற்கு இங்கே ஒரு சிறிய எடுத்துக்காட்டை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, 1975-ஆம் ஆண்டு காலகட்டத்தில், உலகின் மிகச் சிறந்த கால்பந்தாட்ட (football) வீரராக திகழ்ந்த பீலே. அப்போதையே அமெரிக்க அதிபர் ஜெராட் Ford, திரு.பீலேவை சிறப்பு விருந்தினராக (Chief Guest- ஆக) அவரை கௌரவப்படுத்துவதற்காக வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் சிறப்பு செய்கின்றார்.
அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றி நான் குறிப்பிட விரும்புகின்றேன். Ford-ம் - பீலேவும் பேசிக் கொண்டிருக்கும் போது, அங்கு இருக்கக்கூடிய ஒரு சிறுவன் ஒரு Autograph புத்தகத்தை எடுத்துக்கொண்டு அவர்களை நோக்கி வேகமாக ஓடி வருகின்றான். அவன் தன்னுடைய கையில் இருந்த Autograph புத்தகத்தை அமெரிக்க அதிபர் Ford-இடம் நீட்டுவான் என்று அங்கு இருந்த அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், அந்த சிறுவன் ஆட்டோகிராப் புத்தகத்தை football வீரர் பீலேவிடம் நீட்டினான். இதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவுடைய அதிபரின் autograph-ஐ விட, பிரேசிலில் வறுமையான குடும்பத்தில் பிறந்து ஒரு football வாங்கக் கூட காசு இல்லாத நிலையில் விளையாடத் தொடங்கி, Football என்றாலே பீலே தான் என சொல்லும் அளவுக்கு உயர்ந்த பீலேவின் கையெழுத்து தான் அந்த சிறுவனுக்கு பெரியதாக இருந்தது. அது தான் விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் சிறப்பு. விளையாட்டில் சாதிக்க வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். இந்த உலகில் எந்த மூலையில் போட்டிகள் நடைபெற்றாலும் அதில் கலந்துகொள்ள உங்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கிறது” என்றார்.