சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா ரேசிங் தமிழ்நாட்டிற்கு மேலும் வலுசேர்க்கும் - அமைச்சர் பெருமிதம்

 
udhayanidhi

விளையாட்டுத்துறையின் தலைநகராக தமிழ்நாட்டை மாற்றுவதற்கான நம்முடைய முயற்சிக்கு, சிங்காரச் சென்னையில் நடைபெற இருக்கும் ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்டின் இந்திய பந்தய விழா நிச்சயம் வலுசேர்க்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  விளையாட்டின் மூலம் சர்வதேச கவனத்தை தமிழ்நாட்டின் பக்கம் ஈர்க்கும் நம் முயற்சிகளில் ஒன்றான ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்டின் இந்திய பந்தய விழா சென்னையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.


இதற்காக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.15 கோடி நிதி வழங்குவதற்கான காசோலையை, அதன் தலைவர் - மாண்புமிகு அமைச்சர் அண்ணன் சேகர்பாபு அவர்கள் இன்று வழங்கினார்கள். இதற்காக அவருக்கும், துறை சார்ந்த உயர் அலுவலர்களுக்கும் நன்றி. விளையாட்டுத்துறையின் தலைநகராக தமிழ்நாட்டை மாற்றுவதற்கான நம்முடைய முயற்சிக்கு, சிங்காரச் சென்னையில் நடைபெற இருக்கும் ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்டின் இந்திய பந்தய விழா நிச்சயம் வலுசேர்க்கும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.