பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

 
Udhayanithi Stalin

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் அரசு பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். 

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில்,  முதல் அமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பெயரில், காலை சிற்றுண்டி திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் 73 அரசு பள்ளிகளில் படிக்கும் 8,702 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது

இந்நிலையில் மதுரைக்கு சென்றுள்ள தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 8 மணி அளவில் மதுரை நாராயணபுரத்தில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு சென்று காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளிகளில் காலை உணவு திட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து பள்ளி குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். இதேபோல் உதயநிதி ஸ்டாலினுடன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் அமர்ந்து உணவு அருந்தினார். இந்த ஆய்வின்போது மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சிம்ரன்ஜித் சிங், மண்டல தலைவர் வாசுகி சசிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.