விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு

 
ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்...  

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை தகுதி வாய்ந்தவர்களுக்கு இன்னும் மூன்று மாத காலத்தில் விண்ணப்பம் பெறப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்துள்ளார்.

தங்க தென்னரசு செய்தியாளர் சந்திப்பு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பல்வேறு கிராமங்களில் பகுதிநேர நியாய விலை கடை மற்றும் சமுதாயக்கூட கட்டிடம் உள்ளிட்ட சுமார் 2 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “பல்வேறு கிராமங்களில் நியாய விலை கடை இல்லாததால் பல கிலோமீட்டர் தூரம் சென்று ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டிய நிலை இருந்து வந்தது என்று பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் பேசி தர்மாபுரம், உடுப்புக்குளம், கூவர்குளம், துலுக்கன்குளம் ஆகிய கிராமங்களில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பவே நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய ஆட்சி பெண்களை மையப்படுத்தி பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக இன்றைக்கு நிறைய பேர் மனுக்கள் கொடுத்துள்ளனர். அதில் தகுதி வாய்ந்தவர்களுக்கு விண்ணப்ப படிவம் இன்னும் மூன்று மாத காலத்தில் மீண்டும் பெறப்பட்டு யார் யாருக்கெல்லாம் தகுதி இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் நிச்சயமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்” என்றார்.

சாலை மறைக்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேருந்து வசதி செய்து தரக் கோரியும், குடிநீர் வசதி செய்து தர கோரியும் கிராம மக்கள் அமைச்சரிடம் மனு அளித்தனர். அதற்கு அமைச்சர் ஊராட்சி செயலாளரிடம் அடுத்த முறை தான் வரும்பொழுது இப்பகுதியில் குடிதண்ணீர் வசதி இருக்க வேண்டும். மேலும் திருவிருந்தால்புரத்தில் நடைபெற்ற சமுதாயக்கூடம் திறப்பு விழாவின் போது அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் காரியாபட்டியில் உழவர் சந்தையை திறக்க வேண்டும் என்றும் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.