எனது பேச்சுக்கு மனம் வருந்துகிறேன் - அமைச்சர் தங்கம் தென்னரசு

 
thangam thennarasu

எனது பேச்சு மாற்றுத்திறனாளி நண்பர்களின்  மனதைப்  புண்படுத்தியுள்ளதாக அறிந்து வருந்துகிறேன்  என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

thangam thennarasu

இதுதொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூகவலைத்தள பக்கத்தில், கடந்த 18-11-23 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, எனது பேச்சின் ஊடே நான் பயன் படுத்திய வார்த்தை மாற்றுத் திறனாளி நண்பர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாக அறிந்து மிகவும் வருந்துகிறேன்.


மாற்றுத் திறனாளிகள் மீது அன்பும், அக்கறையும், மதிப்பும் எப்போதும் உடையவன் என்ற வகையில், எவ்வித உள் நோக்கமுமின்றி பேட்டியின் ஊடே வெளிப்பட்டதொரு சொல் எனினும், மனம் புண்பட்டிருக்கும் அவர்களது உணர்வினை முழுமையாகப் புரிந்து கொள்கிறேன். எனது மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.