2 ஆண்டுகளில் 280 கோடி பெண்கள் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம்- அமைச்சர் சிவசங்கர்

 
sivasankar

கடந்த இரண்டு ஆண்டுகளில் 280 கோடி பெண் பயணிகள் கட்டணமில்லாமல் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

Tamilnadu minister sivasankar tested corona positive | Indian Express Tamil

2015 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் ஆவினங்குடி பகுதியில் மணல் திருட்டுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.  அப்போது வெள்ளாற்றில் இறங்கி அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் சிவசங்கரன் எம். எல்.ஏ தலைமையில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த வழக்கில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்த பிரிவின் கீழ் சிவசங்கர் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக இன்று கடலூர் நீதிமன்றத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் ஆஜரானார். இந்த வழக்கு விசாரணை வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன், “குன்னம் தொகுதியில் சுடுகாட்டில் மணல் குவாரி அமைத்து மணல் எடுத்து வந்த காரணத்தினால் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்ததில் அவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினோம். அப்போது போலீசார் எங்களை முடக்கி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக இன்று கடலூர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளேன். இதனைத் தொடர்ந்து வருகிற ஜூன் மாதம் 12ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டு உள்ளனர். தமிழகத்தில் போக்குவரத்து கழகத்தில் புதிய தொழிலாளர்கள் பணி நியமனம் செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை வெளியிட்டுள்ளார். அதன் பேரில் முதல் கட்டமாக கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் வருங்காலங்களில் 6 அரசு போக்குவரத்து கழகத்தில் முதலமைச்சர் அனுமதி பெற்று போக்குவரத்து தொழிலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட உள்ளனர். 

கடந்த கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்குவதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டு வந்தது. தற்போது நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் 4000 புதிய பேருந்து வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு உள்ளன. விரைவில் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு பயன்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படும். மேலும் மத்திய அரசு 15 ஆண்டுகள் உபயோகிக்கப்பட்ட வாகனங்கள் பயன்படுத்தக்கூடாது என அறிவித்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் 21,000 பேருந்துகள் இயங்கி வரும் நிலையில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகள் கடந்து உள்ளன. ஆனால் கடந்த கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகள் பேருந்துகள் சரியான முறையில் ஓடவில்லை. மேலும் புதிய பேருந்துகள் வாங்கும் வரைக்கும் அந்த காலகட்டத்தில் இந்த பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும். மேலும் இது தொடர்பாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சரிடம் நான் கோரிக்கை வைத்துள்ளேன். 

அமைச்சர் சிவசங்கருக்கு மீண்டும் கரோனா தொற்று | Corona infection again for Minister  Sivasankar - hindutamil.in

இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் கலந்தலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பஸ் இயக்கும் நேரத்தில் அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படுவதை தடுக்கும் விதமாக நிதிநிலை அறிக்கையில் கூறி இருப்பது போல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளன. மேலும் அவர்கள் தங்கும் அறையில் குளிர்சாதனை வசதி தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் விழுப்புரம் போக்குவரத்து மண்டலத்திற்கு உட்பட்ட கடலூரில் அரசு போக்குவரத்து கழகத்தில் இன்று குளிர்சாதன தங்கும் அறை திறந்து வைக்க உள்ளேன். ஆகையால் பணியாளர்கள் நலனில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அக்கறை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும். 

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 280 கோடி பெண் பயணிகள் இலவசமாக பயணம் செய்து உள்ளனர். மேலும் ஒரு சில இடங்களில் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் செய்யும் தவறுக்கு தமிழக முழுவதும் இந்த நிலை  நீடிக்கிறது என்று கூறுவது தவறு. நல்ல முறையில் இலவச பயணத் திட்டம் செயல்பட்டு வருகின்றது. மேலும் வெளியூரிலிருந்து பயணம் செய்யும் மக்களுக்கு தேவையான உணவுக் கூடங்களில் சரியான முறையில் தரமான உணவுகள் மற்றும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சரியான முறையில் செயல்படாத  இரண்டு உணவுகளை மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் தமிழக முழுவதும் உரிய முறையில் உணவகங்கள் திறந்து பேருந்து பயணம் செய்யும் மக்களுக்கு பாதுகாப்பான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.