செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25வது முறையாக நீட்டிப்பு!

 
senthil balaji

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த சூழலில்  செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இதுவரை 24 முறை நீட்டிக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக செந்தில் பாலாஜி, புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 13ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரைவிட்டுள்ளார்.