“தேர்தல் வருவதால் அம்மனுக்கு தீ மிதப்பார் ஸ்டாலின்” : செல்லூர் ராஜூ கிண்டல்!

 

“தேர்தல் வருவதால் அம்மனுக்கு தீ மிதப்பார் ஸ்டாலின்” : செல்லூர் ராஜூ கிண்டல்!

திமுக தலைவர் ஸ்டாலின் வெள்ளி வேலை கையில் ஏந்தியது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

“தேர்தல் வருவதால் அம்மனுக்கு தீ மிதப்பார் ஸ்டாலின்” : செல்லூர் ராஜூ கிண்டல்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் தேர்தல் பரப்புரை அனல் பறக்க நடந்தேறி வருகிறது. அதிமுக சார்பாக முதல்வர் பழனிசாமி களமிறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். அதேபோல் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மக்கள் கிராம சபை என்ற பெயரில் மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அம்மையார் குப்பம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவருக்கு அதிருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுகவினர் ஸ்டாலினுக்கு வெள்ளி வேலை பரிசாக அளித்தனர். வெள்ளி வேலை கையில் வைத்தபடி மு.க.ஸ்டாலின் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

“தேர்தல் வருவதால் அம்மனுக்கு தீ மிதப்பார் ஸ்டாலின்” : செல்லூர் ராஜூ கிண்டல்!

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, தேர்தல் வருவதால் வேல்குத்தி அம்மனுக்கு தீ மிதிப்பார் ஸ்டாலின். குங்குமம் , விபூதியை தூக்கியெறியும் செயல்களை மக்களும் கடவுளும் ஏற்கமாட்டார்கள் ” என்றார். முன்னதாக ஸ்டாலின் தேர்தல் நெருங்குவதால் இரட்டை வேடம் போடுவதாக முதல்வர் பழனிசாமி, பாஜகவின் எல். முருகன் உள்ளிட்டோர் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.