“இன்று முதல் கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்து" - அமைச்சர் சேகர்பாபு

 
sekar babu

மத்திய அரசு மத, இன ரீதியான குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு அரசு மீது சுமத்த பார்க்கிறது என்று அமைச்சர் சேகர் பாபு குற்றச்சாட்டியுள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்த போது, "ஆம்னி பேருந்துகளை இன்று முதல் கோயம்பேட்டிற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும்.  கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க இன்றே கடைசி நாள். கோயம்பேட்டில் இன்றுடன் ஆம்னி பேருந்துகள் முழுமையாக தடை செய்யப்படும்; ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்காக அரசு செயல்பட முடியாது என்றார்.

sekar babu tn assembly

தொடர்ந்து பேசிய அவர், அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை வைத்து இன, மத பிரச்னைகளை ஏற்படுத்தி தமிழ்நாட்டின் அமைதிய சீர்குலைத்து கலவரத்தை உண்டாக்க நினைத்தவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்;

மத்திய அரசு மத, இன ரீதியான குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு அரசு மீது சுமத்த பார்க்கிறது;

sekarbabu

உரிய அனுமதி எதுவும் பெறாமல்  கோயில்களில் குண்டர்கள் போல எல்இடி திரைகள் அமைத்து பதற்ற நிலையை ஏற்படுத்தினர்" என்றார்.