மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவதா?- சீமானுக்கு அமைச்சர் சேகர் பாபு கண்டனம்!
கரைந்து கொண்டு இருக்கும் இயக்கமாக நாம் தமிழர் கட்சி மாறி உள்ளது என அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார்.
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “உலகில் எந்த நாட்டில் மது இல்லை. உடல் இச்சை வந்தால் பெற்ற தாயிடமோ, மகளிடமோ உறவு வைத்துக் கொள் எனக் கூறுவதுதான் பெண் உரிமையா? திராவிட கழகங்களுக்கு என்ன தத்துவம் இருக்கிறது. கள் இறக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்னை மரங்களை வெட்டியவர் பெரியார். மரத்தை வெட்டி சாய்ப்பதுதான் பகுத்தறிவா? அல்லது எங்கள் தோப்பில் கள் இறக்க அனுமதி இல்லை என்று கூறுவது பகுத்தறிவா? தந்தை பெரியாருக்கும், சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. சமூக நீதிக்காக போராடியது தந்தை பெரியாரா? அல்லது ஆனைமுத்துவா? என கூறினார். சீமானின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாகியுள்ளது.
சீமானின் இந்த பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான், கரைந்து கொண்டு இருக்கும் இயக்கமாக நாம் தமிழர் கட்சி மாறி உள்ளது. வாழ்ந்து மறைந்த பெரிய தலைவர்களை கொச்சைப்படுத்தினால் தான், தன் பெயர் அடையாளப்படும் என்று இவ்வாறு செய்கிறார். எதையாவது பேசி கொண்டிருந்தால்தான் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும் என்று பேசுகிறார். கரைந்து கொண்டிருக்கும் இயக்கத்தை காப்பாற்ற முயற்சிப்பது தான் நல்லது - தலைவர்களை கொச்சைப்படுத்துவது சரியல்ல என கூறியுள்ளார்.