“கர்மவீரர் காமராஜர் ஆட்சி தொடர்கிறது”- அமைச்சர் ராஜ்மோகன்
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தில் அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வின்போது தவெகவினர் அத்துமீறியதாக புகார் எழுந்துள்ளது.

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் அகழாய்வுதளத்தில் படம் எடுக்க டிரோன் கேமரா பயன்படுத்த தடை உள்ளது. தடையை மீறி அமைச்சர் ராஜ்மோகனுடன் வந்த தவெகவினர் ட்ரோன் கேமரா பயன்படுத்தி படம் பிடித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள சமணப் படுக்கை, கி.பி. 1-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமி கல்வெட்டுகளை அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு செய்தார். மதுரை சமணர் படுக்கையில் படுத்துக்கொண்டு அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வில் ஈடுபட்டார். கல்வெட்டின் காலம், வரலாற்று முக்கியத்துவம், பாதுகாப்பு நடவடிக்கை குறித்து தொல்லியல்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “இந்த வரலாற்று பொக்கிஷத்தை பாதுகாக்கவும், உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக மாற்றவும் நடவடிக்கைகளை உடனே எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுவரை இருந்த ஆட்சியாளர்களிடம் பழிவாங்கும் அரசியல் இருந்தது.. Revenge politics நம்மகிட்ட கிடையாது.. மத்திய அரசிடம் அனுமதி வாங்கிய பின் தான், வெளிநாட்டுக்கு பயணம் சென்றோம். கீழடி போன்று தமிழகத்தில் பல இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். கருத்தியல் போர் தொடரும்; உலகத்திற்கு கீழடியின் பெருமைகளை பறைசாற்றுவோம். சமூக நல விடுதி மாணவர்களை நேரில் சந்தித்து, ஒவ்வொரு மாணவரிடமும் தனித்தனியாக பேசி, சில நிமிடங்களில் இராணுவ வேகத்தில் பணிகளை நிறைவேற்றிய முதலமைச்சர் ஜோசப் விஜய். இதுவே கர்மவீரர் காமராஜர் ஆட்சியின் தொடர்ச்சி” என்றார்.

