கஜா புயலின் போது சுவர் ஏறி குதித்து தப்பித்து ஓடியவர் ஓ.எஸ்.மணியன் - அமைச்சர் மெய்யநாதன்

 
minister sakkarapani

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த 11ஆம் தேதி அதீத கன மழை பெய்தது தமிழகத்தில் 44 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சீர்காழி தாலுக்காவில்  விலை நிலங்கள் குடியிருப்பு பகுதிகள் என அனைத்தும் வெள்ளத்தால் மூழ்கியது. சுற்றுச்சூழல் காலநிலை துறை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று மக்கள் குறைகளை கேட்டு அறிந்து அவர்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்.

Minister Meyyanathan

இந்நிலையில் திருநகரி, கீழச்சாலை மேலச்சாலை,அல்லிவிலாகம் பெருந்தோட்டம்,பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி உள்ளிட்ட  பொருட்களை வழங்கினார். அப்போது செய்தியாளரை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், “தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட சீர்காழி,தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் அறிவித்தார். இதன்படி 1,61, 647 பயனாளிகள் பயன்பெறுவார்கள் எனவும் அரசு நிவாரணம் வழங்கிய நிலையில் திமுக சார்பாக அனைத்து ஊராட்சிகளிலும் நிவாரணம் வழங்கும் பணியை இன்று துவக்கி வைக்கிறோம்.

முதற்கட்டமாக 7500 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். மேலும் எடப்பாடி பழனிச்சாமி வந்த இடத்தில் வார்த்தைகளை அள்ளித் தெளித்து சென்றுள்ளார். அதிமுகவினர் உண்மைக்கு மாறான பொய் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். குறிப்பாக கஜா புயலின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஓஎஸ் மணியன் தனது சொந்த தொகுதி மக்களால் முற்றுகையிடப்பட்டு சுவர் ஏறி குதித்து ஓடியவர். ஆனால் நாங்கள் தற்போது வரை மக்களுக்கான களப்பணியில் ஈடுபட்டு வருகிறோம், ஆகையால் திமுக செயல்பாட்டை பற்றி கூற ஓ.எஸ். மணியனுக்கு அருகதை இல்லை. 

அதேபோன்று கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களை அப்போது உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால் தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரடியாக வந்து மக்களை சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து மின்சாரம் வேளாண்மை துறை வருவாய்த்துறை என அனைத்து துறைகளையும்  துரித நடவடிக்கை எடுத்தார். சீர்காழி அருகே திருவாலி ஏரியை தூர்வாராமல் தடுத்து நிறுத்தியது திமுக அரசு என உண்மைக்கு புறம்பாக எடப்பாடி கூறி சென்றுள்ளார். உண்மையிலேயே 2017_18 இரண்டு கட்டங்களாக ஏழு கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் அதிமுக ஆட்சியின் போது தூர் வாரும் பணியானது நடைபெற்று இருந்த நிலையில்  தற்போது திருவாலி ஏரியை பார்வையிட்ட எடப்பாடி பழனிச்சாமி உண்மைக்கு மாறாக திமுக தான் தூர்வாரியது” எனக் கூறினார்.