தமிழ் இனத்தின் பெருமையும் , வரலாறும் உலகெங்கும் கொடி கட்டி பறக்கட்டும்- மனோ தங்கராஜ்

தமிழ் இனத்தின் பெருமையும் , வரலாறும் உலகெங்கும் கொடி கட்டி பறக்கட்டும் என திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாகப் புரிந்துகொள்ள வழிவகை செய்வோருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது, வெண்கலக் கால (Bronze Age: 2,000BC to 700BC) நாகரிகத்துக்கு பின்நோக்கி சென்று, ஆரிய - திராவிட கலாச்சார போரை முடிவுக்கு கொண்டுவரும் பெரும் முயற்சி என அமெரிக்காவின் 'தி நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.
ஒரு இனத்தின் வரலாற்றைத் துடைத்தெறிய வேண்டுமெனில் அதன் கலாச்சாரத்தை அழித்துவிட்டால் போதும். அத்தகைய முயற்சிகளை அறிவியலின் துணைக் கொண்டு முறியடித்து வெற்றிநடைப் போட்டுக் கொண்டிருக்கிறார் நமது மாண்புமிகு முதலமைச்சர் தளபதி திரு. @mkstalin அவர்கள். அதனை அங்கீகரிக்கும் வகையில் புகழ்… https://t.co/6VAfmOyqSz
— Thangam Thenarasu (@TThenarasu) February 2, 2025
இதுதொடர்பான செய்தியை மேற்கோள் காட்டியுள்ள மனோ தங்கராஜ், “ஒரு இனத்தின் வரலாற்றைத் துடைத்தெறிய வேண்டுமெனில் அதன் கலாச்சாரத்தை அழித்துவிட்டால் போதும். அத்தகைய முயற்சிகளை அறிவியலின் துணைக் கொண்டு முறியடித்து வெற்றிநடைப் போட்டுக் கொண்டிருக்கிறார் நமது மாண்புமிகு முதலமைச்சர் தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். அதனை அங்கீகரிக்கும் வகையில் புகழ் பெற்ற 'தி நியூயார்க் டைம்ஸ்' இதழ் கட்டுரை ஒன்றினை வெளியிட்டிருப்பதில் பெருமகிழ்வு. தமிழ் இனத்தின் பெருமையும் , வரலாறும் உலகெங்கும் கொடி கட்டி பறக்கட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.