விரைவில் ஆவின் தண்ணீர் பாட்டில்- அமைச்சர் மனோ தங்கராஜ்

 
mano

ஆவின் பாலின் தினசரி விற்பனையை 40 லட்சம் லிட்டரிலிருந்து 70 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். 

Image

சென்னையில் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர்கள், அனைத்து மாவட்ட துணைப் பதிவாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனோ தங்கராஜ், “ஆவினில் இனி வரும் காலங்களில் உறுதியாக மாற்றத்தை பார்ப்பீர்கள். ஆவின் தினசரி பால் கையாளும் திறனை 40 லட்சம் லிட்டரில் இருந்து 70 லட்சமாக உயர்த்த இந்த ஆண்டிற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் தண்ணீர் பாட்டில் திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

பால் உற்பத்தி கட்டமைப்பை பெருக்கும் விவசாயிகளுக்கு 2 லட்சம் கறவை மாடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கான கடன் வசதி, கால்நடையை பராமரிக்க தேவையான தீவனங்கள் ஆகியவை உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவார காலத்தில் ஆவின் பொருட்கள் தரம் உயர்த்தப்பட்டு இயற்கை முறையில் பொருட்கள் வழங்கப்படும். நான் இருக்கையில் அமர்ந்து ஒரு வார காலம் தான் ஆகிறது. ஒவ்வொன்றாக இனி செய்வேன். பால் உற்பத்தியாளர்களின் நலனை கருதியும், பால் உற்பத்தியை பெருக்கவும் கறவை மாடுகளுக்கு #காப்பீட்டு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். அனுமதி பெறாத பால் குளிரூட்டு நிலையங்கள் மற்றும் பால் விற்பனை நிலையங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.” எனக் கூறினார்.