கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி - அமைச்சர் பங்கேற்பு!

 
tn

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் மாநில அளவிலான கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

கொத்தடிமைத் தொழிலாளர் முறையினை முற்றிலும் ஒழித்திடவும் மற்றும் தமிழ்நாட்டை கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9ம் தேதி கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக அனுசரித்திட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை முன்னிட்டு இன்று (09.02.2024) சென்னை, தி.நகரில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. சி.வெ. கணேசன் அவர்கள். தலைமையில், முதன்மைச் செயலாளர்/ தொழிலாளர் ஆணையர் முனைவர் அதுல் ஆனந்த், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாநில அளவிலான கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்து, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின "உறுதிமொழி"-யினை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முன்னிலையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பில் சிறப்பாக பணிபுரிந்த குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப் பிரிவு துணை காவல் ஆணையர் முனைவர் கோ. வனிதா, சென்னை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் திரு. ரா.ரெங்கராஜன், அரியலூர் மாவட்ட தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் திரு. பெ.தமிழ்ச்செல்வன். நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திரு. எல். திருநந்தன் ஆகியோர்களுக்கு கேடயங்களை அமைச்சர் வழங்கினார்.