அமைச்சர் சி.டி.ஆர். பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்கிய சபாநாயகர்..!
சட்டப்பேரவையில் முக்கியக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பதிலளித்துப் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், திராவிட இயக்கத்தின் பகுத்தறிவுப் பாரம்பரியத்தைப் பற்றிப் பேசும் போது, மறைந்த தலைவர் கருணாநிதி ஜோசியம் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின் அடிப்படையில் தான் மஞ்சள் துண்டை அணிந்து வந்தார் எனக் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே அவையில் கடும் வாக்குவாதம் எழுந்து பரபரப்பானச் சூழல் நிலவியது.
இதனைத் தொடர்ந்து தலையிட்ட சபாநாயகர், “சட்டப்பேரவையில் எடுத்துக்கொள்ளப்பட்ட விவாதப் பொருளுக்கும், நீங்கள் பேசும் விஷயத்திற்கும் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை. விவாதப் பொருளுடன் தொடர்பில்லாத அல்லது மறைந்த தலைவர்கள் குறித்தான தேவையற்ற கருத்துக்களை அவையில் பேச அனுமதிக்க முடியாது” எனக் கூறி, நிர்மல்குமாரின் குறிப்பிட்ட பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
மறைந்த தலைவர் கருணாநிதி தனது வாழ்நாளின் பிற்பகுதியில் தொடர்ச்சியாக மஞ்சள் துண்டு அணிந்து வந்ததன் பின்னணியில் ஜோதிடக் காரணங்கள் இருப்பதாக அவரது அரசியல் எதிரிகளால் பலமுறை விமர்சிக்கப்பட்டாலும், அது மருத்துவ ஆலோசனையின் பேரிலும் தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலுமே அணியப்பட்டதாக அவராலேயே தெளிவுபடுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சட்டப்பேரவையில் இந்த விவகாரம் மீண்டும் எழுப்பப்பட்டு அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதை எல்லாம் தமிழ்நாடு பார்த்துவிட்டது!- @CTR_Nirmalkumar
— Actor Vijay Fans (@Actor_Vijay) August 21, 2026
pic.twitter.com/Gb9cETBbhO
ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதை எல்லாம் தமிழ்நாடு பார்த்துவிட்டது!- @CTR_Nirmalkumar
— Actor Vijay Fans (@Actor_Vijay) August 21, 2026
pic.twitter.com/Gb9cETBbhO

