"எங்கள் பூரணம் அம்மா" - அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி

 
tn

மதுரை கிழக்கு ஒன்றியம், யா. கொடிக்குளம் கிராமத்தை திருமதி. உ. ஆயி அம்மாள் என்ற பூரணம் பூர்வீகமாக கொண்டுள்ளார். அன்னார்யா.கொடிக்குளம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாணவர்களின் நலன் கருதி 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தினை தான் படித்த பள்ளியினை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும் பொருட்டு கட்டிடங்கள் கட்டுவதற்காக தனது மகள் ஜனனி என்பாரின் நினைவாக மனமுவந்து திருமதி. உ. ஆயி அம்மாள் தானமாக வழங்கியுள்ளார். 

tn

இதன் காரணமாக குடியரசு தினத்தையொட்டி பள்ளிக்காக தனது நிலத்தை தானமாக வழங்கிய மதுரை ஆயி அம்மாளுக்கு முதலமைச்சர் சிறப்பு விருது  வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிக்கு தனது ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை வழங்கிய ஆயி அம்மாள் முதலமைச்சரிடம் விருது பெற்றார். 


இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தனது சமூகவலைதள பக்கத்தில், கல்வி எனும் அறத்தின் வழியே ஒன்றிணைந்தோம்.

கல்வி எனும் ஆயுதம் ஏந்தி செயலாற்றுவோம்!

எங்கள் பூரணம் அம்மா என்று குறிப்பிட்டுள்ளார்.