"தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் எம்ஜிஆர்" - பிரதமர் மோடி
![tn](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/933f8db8b6b15ef3e8a2427b6a089c09.webp)
தமிழகத்தின் வளர்ச்சியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார் எம் ஜிஆர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாளையொட்டி அவரை நினைவுக் கூர்ந்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியுள்ளதாவது, " எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு தலைவராகவும் திகழ்ந்தார்.
Today, on his birth anniversary we remember and celebrate the life of the great MGR. He was a true icon of Tamil cinema and a visionary leader. His films, particularly those on social justice and empathy, won hearts beyond the silver screen. As a leader and Chief Minister, he…
— Narendra Modi (@narendramodi) January 17, 2024
சமூக நீதி கொண்ட அவரது படங்கள் வெள்ளித்திரைக்கு அப்பால் இதயங்களை வென்றன. தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர். தமிழகத்தின் வளர்ச்சியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது பணி தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.