"தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் எம்ஜிஆர்" - பிரதமர் மோடி

 
tn

தமிழகத்தின் வளர்ச்சியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார் எம் ஜிஆர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

mgr

எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாளையொட்டி அவரை நினைவுக் கூர்ந்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியுள்ளதாவது, " எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு தலைவராகவும் திகழ்ந்தார்.


சமூக நீதி கொண்ட அவரது படங்கள் வெள்ளித்திரைக்கு அப்பால் இதயங்களை வென்றன. தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர். தமிழகத்தின் வளர்ச்சியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது பணி தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.