எம்.ஜி.ஆரின் 105 து பிறந்த நாள் - அதிமுகவின் முக்கிய அறிவிப்பு இதோ!!

 
mgr

அதிமுக நிறுவனத் தலைவர் பாரத ரத்னா எம்ஜிஆரின்  105வது பிறந்த நாள் வருகிற 17-ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9.30  மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் நிறுவப்பட்டுள்ள உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி வழங்குகிறார்கள்.  நிகழ்ச்சியில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் ,முன்னாள் அமைச்சர்கள் ,நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

எம்.ஜி.ஆரின் 5000 ரூபாய் நன்கொடையும் பெரியாரின் பதிலும்! – #MGR

கொரோனா அதிகமாக உள்ள காரணத்தினால் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ,தத்தமது மாவட்டங்களில் நடைபெறும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எம்ஜிஆரின் பிறந்த நாளான 17ஆம் தேதி அவருடைய நினைவுகளை எப்போதும் நெஞ்சில் சுமந்து உள்ள மாவட்ட ,ஒன்றிய, நகர, பேரூராட்சி ,வார்டு ,மாநகராட்சி , பகுதி , வட்ட அளவில் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும்,  உடன் பிறப்புகள்  அனைவரும் ஆங்காங்கே அமைந்திருக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவச் சிலைகளுக்கும்,  அவரது படங்களுக்கும்  மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை  சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்கள் செய்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

’M.G.R சிலைக்கு காவித் துண்டு’ ஓ.பன்னிர்செல்வம் கண்டிப்பு

கழக அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா,ஆந்திரா ,தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி ,அந்தமான் மற்றும் குவைத் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் 17ஆம் தேதி அன்று ஆங்காங்கே புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைகளுக்கும்,  அவரது படங்களுக்கும்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் ,கழக நிர்வாகிகளும் ,கழக உடன்பிறப்புகளும் ,வழிகாட்டு நெறிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.