ஓசூர் - பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில்- ரூ.29.44 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம்

 
சென்னை மெட்ரோ ரயில்

ஓசூர் - பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்க ரூ.29.44 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

Image

இதுதொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓசூர் முதல்‌ பொம்மசந்திரா வரை விரைவான போக்குவரத்து அமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையைத்‌ தயாரிப்பதற்கு ஆலோசகர்களைத்‌ தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தம்‌ பாலாஜி ரெயில்ரோட்‌ சிஸ்டம்ஸ்‌ மற்றும்‌ ஹபோக்‌ கன்சல்டன்ட்ஸ்‌ ஆகிய கூட்டு நிறுவனத்திற்கு ரூ.29.44 லட்சம்‌ மதிப்பில்‌ கையெழுத்தானது. 

அத்திபள்ளி வழியாக ஓதூர்‌ முதல்‌ பொம்மசந்திரா வரை மொத்தம்‌ தோராயமாக 20 கி.மீ நீளத்திற்கு, தமிழ்நாட்டில்‌ 8 கி.மீ மற்றும்‌ கர்நாடகாவில்‌ 12 கி.மீ என இருமாநிலங்களுக்கு இடையே விரைவான போக்குவரத்து அமைப்பாக இருக்கும்‌.  பல்வேறு போக்குவரத்து நெரிசல்‌ சம்பந்தப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்வது, தற்போதுள்ள பயண தேவை மாதிரியை புதுப்பித்தல்‌, 30 ஆண்டு காலத்திற்கான பயணத்‌ தேவையை 5 ஆண்டு இடைவெளியில்‌ கணித்தல்‌ மற்றும்‌ முன்மொழியப்பட்ட வழித்தடத்தில்‌ பயணிப்பவர்களின்‌ எண்ணிக்கையை மதிப்பிடுதல்‌ ஆகியவை இந்த ஒப்பந்தத்தில்‌ அடங்கும்‌.  

சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனத்தின்‌ மேலாண்மை இயக்குநர்‌ திரு. மு.அ.சித்திக்‌ மற்றும்‌ திட்ட இயக்குநர்‌ திரு.த.அர்ச்சுனன்‌ முன்னிலையில்‌, சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனத்தின்‌ சார்பாக தலைமை பொது மேலாளர்‌ திரு.டி.லிவிங்ஸ்டோன்‌ எலியாசர்‌ (திட்டமிடல்‌ மற்றும்‌ வடிவமைப்பு) மற்றும்‌ பாலாஜி ரெயில்ரோட்‌ சிஸ்டம்ஸ்‌ நிறுவனத்தின்‌ தலைவர்‌ திரு. ஜான்‌ ராஜ்குமார்‌, ஹபோக்‌ கன்சல்டன்ட்ஸ்‌ நிறுவனத்தின்‌ தலைவர்‌ திரு.கே.பி.கோபால்குமார்‌ ஆகியோர்‌ இந்த ஒப்பந்தத்தில்‌ கையெழுத்திட்டனர்‌” என தெரிவிக்கப்பட்டுள்ளது.