#MeToo விவகாரம்; என்ன சொல்கிறார் கமல்ஹாசன்?

 

#MeToo விவகாரம்; என்ன சொல்கிறார் கமல்ஹாசன்?

#Metoo விவகாரத்தில் பாடலாசிரியர் வைரமுத்து சிக்கி இருப்பது குறித்து அவரது நண்பரான கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை: #Metoo விவகாரத்தில் பாடலாசிரியர் வைரமுத்து சிக்கி இருப்பது குறித்து அவரது நண்பரான கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

#MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்தார். தமிழ் திரையுலகின் மூத்த பாடலாசிரியரான வைரமுத்து மீது அவர் எழுதிய பல பாடல்களை பாடிய சின்மயியே பாலியல் புகார் தெரிவித்திருப்பது கோலிவுட்டில் புயலை கிளப்பி வருகிறது. இதில் சின்மயிக்கு ஆதரவாக ஒருதரப்பினரும், வைரமுத்துவிற்கு ஆதரவாக ஒருதரப்பினரும் பேசி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த விவகாரம் பற்றி வைரமுத்து அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை எனவும் பலர் கூறி வருகின்றனர். மேலும், அவரின் பல பாடல்களில் நடித்துள்ள நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் தொழில் என்பதை தாண்டி அவரது நெருங்கிய நண்பர்கள் என்பதால் அவர்கள் இந்த விவகாரம் குறித்து என்ன பேசப்போகிறார்கள் என பரவலாக எதிர்பார்ப்பு நிலவியது. 

இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த கமல்ஹாசனிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினர். அப்போது அவர் பதிலளிக்கையில், நியாயமான முறையில் “மீ டூ” குறையை சொல்ல வேண்டும். MeToo விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்றார்.