மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நோட்டீஸ்!!

 
fff

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு  நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது.  இந்த அறிவிப்பிற்கு பின் தேயிலை தோட்டங்களில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

tttt

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (பி.பி.டி.சிமிமிடெட்) - ன். மாஞ்சோலை மணிமுத்தாறு மற்றும் ஊத்து தேயிலைத் தோட்டம் மற்றும் தேயிலை தொழிற்சாலைகளை உள்ளடக்கிய சிங்கம்பட்டி கருப்பில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இதன் மூலம் அறிவிப்பது என்னவென்றால். சிங்கம்பட்டி நிலைதிருத்தமான முறையில் மேலாண்மை செய்வதற்கு உதவ குரூப்பின் வணிகத்தை வெளிப்படுத்தும் விருப்ப பணி ஓய்வு திட்டம் (VRS) மூலம் தொழிலாளர்கள் தங்களது பிபிடி.சி.பிமிடெட் தகுதியின் அடிப்படையில் பலன்கள் பெற்றுக் கொள்ளும்வகையில் அதனை தேர்வு செய்து கொள்ள அழைக்கப்படுகிறர்கள். 

tn

விருப்ப பணி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்குதி பிபிடிசி. லிமிடெட் நிறுவனமானது சட்டப்படியாக வழங்கப்பட வேண்டிய பலன்கள் மட்டுமல்லாது அதனோடு சேர்த்து கருணைத் தொகையும் மற்றும் 2023-2024 -ம் நிதி ஆண்டிற்கான சட்டப்படியிலான போளஸ் தொகையும் (மிகை ஊதியம்) இணைந்து வழங்கப்படும். விருப்ப பணி ஓய்விற்கான அனைத்து வழிமுறைகளும் தீர்வு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டு விருப்ப ஓய்வு பெற விண்ணப்பிக்கும் அனைத்து தொழிலாளர்களும் அதில் கையொப்பமிட வேண்டும். 

தகுதி வணிகளின் அடிப்படையில் அதற்கான தலைப்பின்படி வழங்கப்படும் பணப்பலன்கள் பற்றிய விபரங்கள் விருப்ப ஓய்விற்கான திட்டத்தில் தெளிவாக கோடிட்டு காண்பிக்கப்பட்டு, விருப்ப ஓய்விற்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிலாளிக்கும். பெறுகின்ற பணப்பலன்களின் உண்மையான தொகையினை உறுதி செய்யும் வகையில் தனித்தனியாக கடிதங்கள் கொடுக்கப்படும். அவரவர்கள் தீர்வு ஒப்பந்தத்தின் நகலும் மற்றும் விருப்ப ஓய்வு பெறுவதற்கான விண்ணப்ப படிவமும் மாஞ்சோலை, மணிமுத்தாறு தொழிற்சாலை அலுவலகத்திலும் தொழிலாளர்களின் பர்வைக்காக 14.06.2024 மற்றும் ஊத்து எஸ்டேட் அலுவலகத்திலும் தேயிலை வரை வைக்கப்படும். தொழிலாளர்கள் தங்களது விருப்ப ஓய்விற்கான விண்ணப்பத்தை சம்பிக்க கடைசி நாள் 14.06.2024 ஆகும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.