வரும் 13ம் தேதி சென்னை வருகிறார் மல்லிகார்ஜுன கார்கே
![tn](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/ebbe9d0c81455dbcf6ad2bdde0ec98c0.webp)
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வரும். 13ம் தேதி சென்னை வருகிறார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக- காங்கிரஸ் இடையேயான பேச்சு வார்த்தை கடந்த 28ஆம் தேதி சென்னை அண்ணா அறிவிலாயத்தில் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு , ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தரப்பில் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜோய் குமார், கே.எஸ்.அழகிரி, செல்வபெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் தொகுதி பங்கீடு தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. திமுக - காங்கிரஸ் இடையே பிப்ரவரி 9ஆம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், பிப். 9 மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வரும். 13ம் தேதி சென்னை வருகிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. அன்று, மக்களவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.