கலைஞர் மகளிர் உரிமை திட்டம்: நிராகரிக்கப்பட்டோர் 18 முதல் விண்ணப்பிக்கலாம்

 
TN

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார்.   கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

mk stalin

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் நாளை மறுநாள் முதல் மீண்டும் இ சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.  தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

tn

நிராகரிக்கப்பட்ட 56.60 லட்சம் பேருக்கு காரணங்கள் 18ம் தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும் . காரணங்களை அறிந்து கொள்ள முடியாதவர்கள் கோட்டாட்சியர் அலுவலகங்களை அணுகலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.