திருமணம் செய்துகொள்வதாக 13 ஆண்டுகள் காதலித்து ரூ.68 லட்சம் ஏமாற்றிய தில்லாலங்கடி காதலன்

 
Lover

சென்னையில் திருமணம் செய்து கொள்வதாக 13 ஆண்டுகள் காதலித்து 68 லட்சம் வரை ஏமாற்றி  வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளவுள்ள காதலன் மீது நடவடிக்கை எடுக்கோரி காதலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Why-cheat-and-marry-another-woman--Woman-complains-against-fraudster

சென்னை வடபழனியை சேர்ந்தவர் செல்வி சூர்யா ராஜ்குமார்(27). இவர் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே உடன் படித்த நிஷாந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். காதலித்த போது நிஷாந்த் செல்வி சூர்யாவை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார். 

பல முறை திருமணம் செய்து கொள்ள கேட்டும் நிஷாந்த் பல்வேறு காரணங்களை கூறி தவிர்த்து வந்துள்ளார். இதனிடையே தனது தந்தைக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சூர்யாவிடம் தனது தந்தைக்கு உதவி செய்தால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார் என கூறியுள்ளார். இதற்கு நிஷாந்தின் தந்தை சுதர்ஷன், ஜெயந்தி ஆகியோரும் உடந்தையாக செயல்பட்டு தனது மகனை திருமணம் செய்து வைப்பதாக கூறி சுமார் 68 லட்சம் வரை பணம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் நிஷாந்திற்கு தொழிலதிபர் மகளுடன் திருமணம் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து தான் ஏமாற்றுப்பட்டதை உணர்ந்த சூர்யா, தனது நண்பர்கள் மூலம் விசாரித்ததில் நிஷாந்த் இதேபோல் வெளி நாடுகளில் முதலீடு செய்வதாக கோடிக்கணக்கில் மோசடி செய்து வந்தது தெரியவந்தது. எனவே தான் ஏமாற்றப்பட்டதற்கும் பண மோசடி செய்த நிஷாந்த் மீது நடவடிக்கை எடுக்கோரி புகார் அளித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து விருக்கம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் நிஷாந்தின் தந்தை சுதர்சன், ஜெயந்தி ஆகியோரை விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர். நிஷாந்திற்கு பிரபல தொழிலதிபர் K.S.ஷெட்டி,கஸ்த்தூரி ஷெட்டி மகள் மாலவிகா ஷெட்டியுடன் நாளை திருமணம் நடைபெறவிருந்தது. இதைத்தொடர்ந்து நாளை மறுதினம் வரவேற்பு நிகழ்ச்சியும் இருந்தது. தற்போது காதலன் மீது காதலி அளித்துள்ள புகாரால் நிஷாந்திற்கு நடைபெறவிருந்த திருமணத்தை பெண் வீட்டார் நிறுத்தியுள்ளனர். இந்த புகார் தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் போக்சோ உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.