சரக்கு வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்தால், அரசுக்கு ரூ. 1724 கோடி இழப்பு!

 

சரக்கு வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்தால், அரசுக்கு ரூ. 1724 கோடி இழப்பு!

தமிழகத்தில் சரக்கு வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்தால், அரசுக்கு 1724 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், சரக்கு வாகனங்களுக்கான மோட்டார் வாகன வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு, மே 14 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு தடை விதிக்க கோரி, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் அதன் தலைவர் முருகன் வெங்கடாச்சலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தமிழக உள்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஊரடங்கு காரணமாக கனரக வாகனங்கள் இயக்கப்படவில்லை என்பது தவறு எனவும், சரக்கு வாகனங்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரக்கு வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்தால், அரசுக்கு ரூ. 1724 கோடி இழப்பு!

வாகனங்களின் தகுதிச் சான்று, பதிவுச் சான்று, பெர்மிட் ஆகிய மோட்டார் வாகன சட்ட ஆவணங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், மோட்டார் வாகன வரி செலுத்த கால அவகாசத்தை நீட்டிப்பதை பொறுத்தவரை அது உள்துறை சம்பந்தப்பட்டது அல்ல என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன வரி செலுத்துவதற்கு ஏற்கனவே ஜூன் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், வரி செலுத்த விலக்கு அளித்தால் அரசுக்கு 1724 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் சரக்கு வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்படாததால், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மோட்டார் வாகன வரி செலுத்துவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்ற கேள்வியே எழவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.