வருகிற 2ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!!
Jan 31, 2024, 10:34 IST1706677442174
![tn](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/cbc87e106335b565fd8cee04435c5679.jpg)
வருகிற 2ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் பிப்ரவரி 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை குடமுழுக்கு விழா நடைபபெறுகிறது. குடமுழுக்கு விழாவையொட்டி திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2ம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பிப்ரவரி 3-ம் தேதியான சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.