கரூர் மாவட்டத்துக்கு ஜன.28 உள்ளூர் விடுமுறை!
தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி நன்னீராட்டு விழாவை முன்னிட்டு ஜன.28-ம் தேதி கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.
தான்தோன்றி மலை கல்யாண வெங்கடரமண ஸ்வாமி கோவிலுக்கு பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. கல்யாண வெங்கடரமண ஸ்வாமி சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். கரூரில் உள்ள தாந்தோன்றி மலை கல்யாண வெங்கடரமண ஸ்வாமி கோவிலில் திருமண தடைகள் நீங்கவும், குழந்தை இல்லாத தம்பதிகள் திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்யும் பிரார்த்தனை தலமாகும். இக்கோயிலுக்கு வரும் 28ஆம் தேதி நன்னீராட்டு விழா நடைபெறவுள்ளது.
தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி நன்னீராட்டு விழாவை முன்னிட்டு ஜன.28-ம் தேதி கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பிப்.7-ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


