காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை..!!
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனி திருவிழா நாளை(ஜூலை 10) நடைபெறவுள்ளது. இதனையொட்டி காரைக்காலில் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காரைக்கால் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி விழாவை கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. மாங்கனி திருவிழா 08.07.2025 முதல் 11.07.2025 வரை பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. தெய்வங்களின் புனித திருக்கல்யாணம் 09.07.2025 அன்று நடைபெற உள்ளது. மேலும் பக்தர்களுக்கு மாம்பழங்களை பொழியும் மங்களகரமான நிகழ்வு 10.07.2025 (வியாழக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில், மேதகு புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுடன், அருள்மிகு காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனித் திருவிழாவை கொண்டாடுவதற்காக காரைக்கால் பகுதிக்கு 10.07.2025 அன்று உள்ளூர் விடுமுறை (அரசு அலுவலகங்கள்/நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்) அறிவிக்கப்படுகிறது. அதற்கு ஈடு செய்யும் வேலை நாளாக 19.07.2025 (சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


