ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - பிப்ரவரி 5-ம் தேதி அரசு விடுமுறை!

 
Erode East

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 5-ம் தேதி ஈரோடு மாவட்டத்துக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிப்ரவரி 5.ம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக கடந்த பத்தாம் தேதி முதல் 17ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. 18ம் தேதி நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.  இந்நிலையில் நேற்று மாலை 3 மணி வரை வேட்பு மனுவை திரும்ப பெற கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.  காலை 11 மணிக்கு முதல் நபராக அதிமுகவில் இருந்து சுயேச்சையாக போட்டியிட்ட செந்தில் முருகன் தனது மனுவை திரும்ப பெற்றார். அடுத்தடுத்து சில சுயேச்சைகள் மனுக்களை திரும்ப பெற்றனர். மாலை 3 மணி வரை 8 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்ற நிலையில், இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 5-ம் தேதி ஈரோடு மாவட்டத்துக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5ம் தேதி அரசு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளராக உள்ளவர்கள், மாநிலத்தின் வேறு பகுதியில் பணி புரிந்தாலும் அவர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.