"சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஜூன் 20-ம் தேதி தொடங்கும்" - சபாநாயகர் அப்பாவு

 
appavu

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 26(1)-ன்கீழ், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 24-6-2024-ஆம் நாளுக்குப் பதிலாக 2024-ஆம் ஆண்டு, ஜூன் திங்கள் 20-ஆம் நாள், வியாழக்கிழமை, காலை 10.00 மணிக்கு, சென்னை-600 009, தலைமைச் செயலகத்திலுள்ள பேரவை மண்டபத்தில் கூட்டியுள்ளார்கள் என்று சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் அறிவித்துள்ளார். 

appavu

இந்நிலையில் நெல்லையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஜூன் 20-ம்  தேதி தொடங்கும்;  விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் சட்டப்பேரவை உறுப்பினராக நாளை (ஜூன் 12) பதவி ஏற்கிறார் என்றார்.