சட்டம் ஒழுங்கு விவகாரம் - முதலமைச்சர் ஆலோசனை

 
stalin

தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

stalin

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விகுறியாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60 ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை என அடுக்கடுக்காக பல குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆளும் திமுக அரசை எதிர்க்கட்சிகள் மாறிமாறி குற்றச்சாட்டி வருகிகின்றனர். 

stalin

இந்நிலையில்  தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.  புதிதாக நியமிக்கப்பட்ட சென்னை காவல் ஆணையர் அருண், தலைமைச்செயலாளர், உள்த்துறை செயலாளர், கூடுதல் காவல்துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசிர்வாதம் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.