எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘பாரத ரத்னா’விருது வழங்கி கௌரவித்த பிரதமர் மோடிக்கு நன்றி - எல்.முருகன்
![L Murugan](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/bef72e9aa6fb49dec7d1796c7bf58e06.jpeg)
எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு, தேசத்தின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கௌரவித்துள்ள பாரதப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் பிறந்தவர், பாரதத்தின் சிறந்த வேளாண் விஞ்ஞானி, பசுமை புரட்சியின் தந்தை மரியாதைக்குரிய எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் மிகச் சிறந்த தாவர மரபியல் நிபுணராகவும், மனிதாபிமானியாகவும் திகழ்ந்தவர். நமது தேசத்தில் ‘பசுமைப் புரட்சி’ ஏற்படுத்தியதில் முக்கியமானவர். இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் வங்காள தேசத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது, பாரத மக்களுக்கான உணவுத் தேவையை உறுதி செய்யும் நோக்கில் தன் வாழ்வை வேளாண் துறைக்கு அர்ப்பணித்தார்.
தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் பிறந்தவர், பாரதத்தின் சிறந்த வேளாண் விஞ்ஞானி, பசுமை புரட்சியின் தந்தை மரியாதைக்குரிய எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் மிகச் சிறந்த தாவர மரபியல் நிபுணராகவும், மனிதாபிமானியாகவும் திகழ்ந்தவர்.
— Dr.L.Murugan (@Murugan_MoS) February 9, 2024
நமது தேசத்தில் ‘பசுமைப் புரட்சி’ ஏற்படுத்தியதில் முக்கியமானவர்.… pic.twitter.com/xkXsw10qml
சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, ராமன் மகசேசே விருது மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உலக அறிவியல் விருது” போன்ற பல்வேறு விருதுகளுக்கும், கௌரவத்திற்கும் உரியவரான மரியாதைக்குரிய எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு, தேசத்தின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கௌரவித்துள்ள பாரதப் பிரதமர் திரு.மோடி ஜி அவர்களுக்கு தமிழக மக்களின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.