நீட் வெறுப்பு போர்வையில் பிரிவினைவாத பிரசாரம்... மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா?- எல்.முருகன்

 
எல் முருகன்

நீட் வெறுப்பு போர்வையில் பிரிவினைவாத பிரசாரம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவாரா? என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Image


இதுதொடர்பாக 2 புகைபடங்களை டிவிட்டரில் சுட்டிக்காட்டியுள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன, “தமிழகத்தில் திமுக கூட்டணியினர் செய்து வரும்  நீட் வெறுப்பு பிரசாரம், தேச விரோத கும்பல்களுக்கு எந்த அளவிற்கு ஊக்கமளிக்கிறது என்பதற்கு சான்றுகள் தான் இவை. சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி பகுதியில் சாலையோர சுவர்களில் நீட் எதிர்ப்பு என்ற போர்வையில் பிரிவினைவாத, தேசவிரோத கருத்துகள் அப்பட்டமாக பரப்பப்படுகின்றன. 

Image

திமுக ஆட்சியில் தேச விரோத, பிரிவினைவாத கும்பல்களின் செயல்பாடு அதிகரித்து வருவது, பாரத தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவரையும்  வேதனைக்குள்ளாக்கும் செயல். இதுபோன்ற பிரிவினைவாத கும்பல்களை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் தமிழகம் பெரும் ஆபத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டு விடும். முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேசவிரோத கும்பல்களை கைது செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.