இம்மானுவேல் சேகரனின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் - எல்.முருகன்

 
l murugan

மாவீரர் தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினத்தில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வீர வணக்கம் செலுத்துவோம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார். 

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்து சிறை சென்றவரும், சமூக சேவை மேற்கொள்வதற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காகவும் தனது இராணுவப் பணியை துறந்தவரும், பன்மொழிப் புலவருமான  இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக எல்.முருகன் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய சுதந்திரத்திற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காகவும் இளம் வயதிலேயே உரிமைகுரல் கொடுத்து இலட்சியத்துடன் அயராது பாடுபட்ட மாவீரர் தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினத்தில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வீர வணக்கம் செலுத்துவோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.