கைது செய்யப்பட்ட குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் விடுதலை!

 
kushbu

மதுரையில் பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்று கைது செய்யப்பட்ட குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என  எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ஆளுநரை சந்தித்தார். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து மதுரையில் தடையை மீறி பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குஷ்பு உள்ளிட்ட பாஜகவினரை காவல்துறை கைது செய்தது.  

இந்த நிலையில், மதுரையில் பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்று கைது செய்யப்பட்ட குஷ்பு விடுவிக்கப்பட்டுள்ளார். குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் தடையை மீறி போராடியதற்காக குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.