#BREAKING அம்மா உணவக இட்லி தனியார் ஹோட்டலுக்கா?

 
s

கோவில்பட்டி நகராட்சி அருகே உள்ள அம்மா உணவகத்தில் இட்லி ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 


கோவில்பட்டி நகராட்சிக்கு அருகில் இருக்கக்கூடிய அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் இட்லிகள் அங்கு சாப்பிட வரும் மக்களுக்கு வழங்கப்படாமல் மொத்த மொத்தமாக சிற்றுண்டி நடத்துபவர்களுக்கு வழங்கப்படும் அவல நிலை உள்ளது. இங்கு ஒரு ரூபாய்க்கு இட்லி வாங்கிக் கொண்டு வெளியில் அதிக விலைக்கு விற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து கேட்டால் அதிகாரிகள் தான் விற்பனை செய்ய சொன்னதாக ஊழியர்கள் கூறுகின்றனர். 

காலை வேளையில் அரை மணி நேரத்திலேயே இட்லி தீர்ந்துவிட்டது என சொல்வதாக பொதுமக்கள் கூறுகின்றனர். பள்ளிக் குழந்தைகள் முதியவர்கள் ஐந்து இட்லி கேட்டால் தர மறுக்கும் அம்மா உணவகத்தின் ஊழியர்கள் 60 இட்லி, 80 இட்லி என மொத்த மொத்தமாக விற்கும் அவல நிலை உள்ளது.